Published : 15 Sep 2020 07:25 AM
Last Updated : 15 Sep 2020 07:25 AM
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில் மாநிலங்களவை உறுப்பினரான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அதில் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், கரோனா காரணமாக 75 வயதைக் கடந்த பெரும்பாலான எம்.பி.க்கள் அதில்பங்கேற்கவில்லை. மாநிலங்களவை உறுப்பினரான ப.சிதம்பரம் நாளை (செப். 16) 75 வயதை நிறைவு செய்து 76-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
எனவே, அவரும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க டெல்லி செல்லாமல் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தங்கி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறும்போது, ப.சிதம்பரம் எப்போதும் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. வாழ்த்து தெரிவிப்பவர்களையும் அவர் சந்திப்பதில்லை. அதுபோல இந்த ஆண்டும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT