Published : 14 Sep 2020 07:22 AM
Last Updated : 14 Sep 2020 07:22 AM

புரட்டாசி மாதம் பிறக்க உள்ளதால் மீன், இறைச்சிக் கடைகளில் கூட்டம்

சென்னை

புரட்டாசி மாதம் பிறக்க உள்ளதால் மீன் சந்தை, இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளில் மக்கள் குவிந்து விடுகின்றனர்.

இந்நிலையில், பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் வரும் 17-ம் தேதி பிறக்க உள்ளது.இதனால், அடுத்த ஒரு மாதத்துக்கு பல வீடுகளில் அசைவ உணவுகளை தவிர்ப்பது வழக்கம். எனவே, புரட்டாசி மாதம் பிறப்பதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதல் சென்னை காசிமேடு மீன்சந்தையில் மீன்களை வாங்க சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர். இருப்பினும், சமூக இடைவெளி கேள்விக்குறியானது.

இதேபோல், சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் மீன் சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல், ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சிகளை விற்பனை செய்யும் கடைகளிலும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x