Published : 19 Sep 2015 08:42 AM
Last Updated : 19 Sep 2015 08:42 AM

சென்னை வர்த்தக மையத்தில் 2 நாள் கண்காட்சி இன்று தொடக்கம்: அதிரடி விலை குறைப்பில் வீடுகளை வாங்கலாம்

அதிரடி விலை குறைப்பில் வீடுகள், மனைப் பிரிவுகளை வாங்க வசதியாக “பிராபர்டி ஃபெஸ்டிவல்-2015” கண்காட்சி நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் (செப். 19, 20) நடைபெறுகிறது. காலை 10.30 மணி வரை இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

இது தொடர்பாக இக்கண்காட்சியை நடத்தும் பிராம்ப்ட் டிரேட் ஃபேர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஏ.உதயகுமார் கூறியதாவது:

ரியல் எஸ்டேட் துறை விறுவிறுப்பாக இல்லாத காலகட்டமாக இருப்பதால் அதிரடியாக விலை குறைக்கப்பட்ட தனி வீடுகள், அபார்ட்மென்ட்கள், வில்லா டைப் வீடுகள் இந்த கண்காட்சியில் விற்பனைக்கு தயாராக உள்ளன. கண்காட்சி நடைபெறும் 2 நாட்களும் குடியிருப்புகளை புக் செய்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இக்கண்காட்சியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட அரங்குகளில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்திருக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை தேர்வு செய்யலாம்.

ஐஓபி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற தேசிய வங்கிகள் அரங்குகளை அமைத்து வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வசதி கடன்களை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x