Published : 18 Sep 2015 12:49 PM
Last Updated : 18 Sep 2015 12:49 PM
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆணையில், "திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி அமராவதி பிரதானக் கால்வாய் கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு 19.9.2015 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது.
இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT