Published : 13 Sep 2020 06:42 PM
Last Updated : 13 Sep 2020 06:42 PM

தமிழகத்தில் இன்று புதிதாக 5,693 பேருக்குக் கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்வு; ஒரே நாளில் 74 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய நிலவரம்

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,693 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 2,759 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று (செப். 13) கரோனா தொற்று பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

தமிழகத்தில் இன்று புதிதாக 5,693 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,410 பேர். பெண்கள் 2,283 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 2,759 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 3 லட்சத்து 3,201பேர். பெண்கள் 1 லட்சத்து 99 ஆயிரத்து 529 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 21 ஆயிரத்து 850 பேர். 13-60 வயதுடையவர்கள் 4 லட்சத்து 15 ஆயிரத்து 217 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 65 ஆயிரத்து 692 பேர்.

இன்று 84 ஆயிரத்து 308 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 58 லட்சத்து 88 ஆயிரத்து 86 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 82 ஆயிரத்து 387 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 57 லட்சத்து 1,399 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் தனியார் மருத்துவமனைகளில் 39 பேர், அரசு மருத்துவமனைகளில் 35 பேர் என, 74 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 8,381 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 8 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 66 பேர்.

இன்று 5,717 பேர் மருத்துவமனைகளிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 366 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை 47 ஆயிரத்து 12 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை நிலவரம்

இன்று கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 994 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,228 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 2,976 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 10 ஆயிரத்து 393 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 65 மற்றும் தனியார் சார்பாக 103 என, 168 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன"

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x