Published : 13 Sep 2020 11:08 AM
Last Updated : 13 Sep 2020 11:08 AM

பிரதமர் கிசான் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

பிரதமர் கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பழனிசாமி பரிந்துரைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்திஉள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

பிரதமர் கிசான் திட்டத்தில் தமிழகத்தில் ஒரே மாதிரியான முறைகேடு நடைபெற்றுள்ளது. இதில் அதிகாரிகள், விவசாயத் துறையில் உள்ள தற்காலிக ஊழியர்கள், இணையதள மையங்களின் உரிமையாளர்கள், சில இடங்களில் முகவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

6 லட்சம் போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டு ரூ. 110 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. ஆனால், இதற்கும், மாநில அரசுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி மத்திய அரசின் மீது முதல்வர் பழனிசாமி பழி போடுகிறார். இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளை அடையாளம் காண இணையவழியை கையாண்டதுதான் ஊழலுக்கு காரணம் என்றுமுதல்வரே குற்றம் சாட்டுவதால் இந்த முறைகேட்டில் தொடர்புடைய குற்றவாளிகளை எப்படிகண்டுபிடிப்பது என்றே தெரியவில்லை.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நேரத்திலும், இந்த முறைகேட்டை ஆட்சியாளர்களும் மறுக்கவில்லை. முறைகேடு செய்யப்பட்ட பணத்தில் பாதிஅளவு திரும்ப மீட்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

லாக் இன் பாஸ்வேர்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டு ஒரே மாதிரியாக முறைகேடு நடந்துள்ளதை மத்திய வேளாண் துறையும் ஒப்புக் கொண்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் நாட்டின் வேறு எந்த பகுதியிலும் நடைபெறவில்லை என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பழனிசாமி பரிந்துரை செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முறைகேடு செய்யப்பட்ட பணத்தில் பாதி
அளவு திரும்ப மீட்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x