Published : 13 Sep 2020 07:45 AM
Last Updated : 13 Sep 2020 07:45 AM

மாநகராட்சி சார்பில் 23 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கான ஊரடங்கு கால நிவாரணத் தொகை

சென்னை மாநகராட்சி சார்பில் 23 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணத் தொகையாக தலா ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று காரணமாக தமிழக அரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வாதார நிதி ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இத்திட்டத்தின்கீழ் இதுவரை சென்னை மாவட்டத்தில் வசிக்கும் தகுதிவாய்ந்த 23 ஆயிரத்து 841 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஊரடங்கு காலத்தில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கி வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் என அனைவரும், மாற்றுத் திறனாளிகளுக்கான நீல நிற தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல் ஆகிய சான்றுகளை, தாங்கள் வசிக்கும் பகுதிக்கு வரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடம் சமர்ப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை 044-24714758 என்ற எண்ணிலும், 18004250111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறபட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x