மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

மதுரை மாணவி தற்கொலை: நீட் தேர்வின் கோர முகத்தைக் காட்டுகிறது; ஸ்டாலின்

Published on

மதுரை மாணவியின் தற்கொலை நீட் தேர்வின் கோர முகத்தைக் காட்டுகிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப். 12) தன் முகநூல் பக்கத்தில், "நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

'எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்தீங்க; ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு' என்று அவர் பேசிய ஆடியோ, நீட் தேர்வின் கோர முகத்தைக் காட்டுகிறது.

ஒரு தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது.

தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்கிறேன்!

நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை, மீண்டும் மீண்டும் சொல்கிறேன்!" என பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in