Published : 12 Sep 2020 07:09 AM
Last Updated : 12 Sep 2020 07:09 AM
ஆந்திர மாநிலத்தில் உள்ள கோயிலுக்காக 25 டன் எடையில் 13 அடி உயர சிவலிங்கம் மாமல்லபுரம், சிற்ப தொழிற்கூடத்தில் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தின் பாரம்பரிய சிற்பக் கலையை வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டினர் பெரிதும் விரும்புவதால், பல்வேறு கோயில்களுக்காக இங்கு சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே தாலப்பாளையம் கிராமத்தில் உள்ள சிவாலயம் ஒன்றுக்காக, இசக்கிமுத்து என்ற சிற்பக் கலைஞரின் சிற்ப தொழிற்கூடத்தில், 13 அடி உயரத்தில் தாமரைப்பூ மீது சிவலிங்க சிலையும், அதனுள்ளேயே 10,008 சிவலிங்கங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுமார் 14 மாதத்தில் செய்யப்பட்ட இந்த சிலை, இன்னும் ஓரிரு நாட்களில், ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT