Published : 11 Sep 2020 07:53 AM
Last Updated : 11 Sep 2020 07:53 AM

10 விதமான துறை சார்ந்த பிரிவுகளை தேர்வு செய்து சென்னை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: திறன் மேம்பாட்டுத் திட்ட கூட்டத்தில் முடிவு

சென்னையில் 10 விதமான துறைகளை தேர்வுசெய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு திட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாவட்ட தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக நேற்று மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தலைமையில் திட்டக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அரசு மற்றும்தனியார் துறை உயர் அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் தொழில் முனைவோர் மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் விருதுபெற திட்டம் தயாரித்தல், சென்னை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பில் திறன் மற்றும் பலப்படுத்தும் தொழில்கள் மதிப்பு மேம்பாட்டு முடிவுகளின்படி நிறுவனங்களில் தொழில் பழகுநர்களை ஊக்குவித்தல், சென்னை மாவட்டத்தில் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் 10 விதமான துறைகள் சார்ந்த பிரிவுகளை தேர்வு செய்து, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் சென்னை மண்டல பயிற்சி இணை இயக்குநர் மகேஸ்வரன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x