Published : 11 Sep 2020 07:40 AM
Last Updated : 11 Sep 2020 07:40 AM

ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற ஆ.ராசா, பொன்முடி

திமுக துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆ.ராசா, க.பொன்முடி ஆகியோர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வாழ்த்து பெற்றனர்.

திமுக பொதுக்குழுக் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில்கட்சியின் துணை பொதுச்செயலாளர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தமிழக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். காணொலி மூலம் பொதுக்குழு கூட்டம் நடந்ததால் இருவரும் அவரவர் மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து நேற்று சென்னை வந்த இருவரும், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திமுகவின் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ள பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, க.பொன்முடி ஆகியோருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x