Published : 10 Sep 2020 06:39 PM
Last Updated : 10 Sep 2020 06:39 PM

தமிழகத்தில் இன்று 5,528 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 991 பேர் பாதிப்பு: இன்று மட்டும் 64 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறித்த இன்றைய நிலவரம்.

சென்னை

தமிழகத்தில் இன்று 5,528 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 991 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 606 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று (செப். 10) கரோனா தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று 5,528 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,377 பேர். பெண்கள் 2,151 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் 2 லட்சத்து 93 ஆயிரத்து 154 பேர். பெண்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 869 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 21 ஆயிரத்து 399 பேர். 13-60 வயதுடையவர்கள் 4 லட்சத்து 1,255 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 63 ஆயிரத்து 398 பேர்.

இன்று மட்டும் 85 ஆயிரத்து 473 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 56 லட்சத்து 30 ஆயிரத்து 323 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று 83 ஆயிரத்து 411 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 54 லட்சத்து 49 ஆயிரத்து 635 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 22 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 42 பேர் என, 64 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 8,154 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 6 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 58 பேர்.

இன்று மட்டும் 6,185 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 48 ஆயிரத்து 482 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை நிலவரம்

இன்று புதிதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 991 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 606 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,009 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 840 ஆக உயர்ந்துள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 2,921 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை 10 ஆயிரத்து 845 பேர் (வீட்டு சிகிச்சை உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 64 மற்றும் தனியார் சார்பாக 99 என, மொத்தம் 163 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன".

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x