தனியார் வங்கி முன்பு தீக்குளித்து இறந்த இளைஞரின் குடும்பத்துக்கு நிவாரணம்

தனியார் வங்கி முன்பு தீக்குளித்து இறந்த இளைஞரின் குடும்பத்துக்கு நிவாரணம்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வீட்டுக் கடன் பெற்றிருந்த, வல்லத்தைச் சேர்ந்த வெல்டிங் கூலித் தொழிலாளி ஆனந்த்(40), கடன் மற்றும் வட்டித் தொகையை செலுத்தச் சொல்லி வங்கி அலுவலர்கள் கொடுத்த நெருக்கடியால் கடந்த ஆக.27-ம் தேதி வங்கி முன் தீக்குளித்தார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி ஆக.29-ம் தேதி இறந்தார். வங்கியைக் கண்டித்தும், நியாயம் கோரியும் பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டத்தை அடுத்து, வங்கிக்கடன் நிலுவை ரூ.6 லட்சத்து 94 ஆயிரத்து 287 தள்ளுபடி செய்யப்படும். இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என வங்கி அலுவலர்கள் ஆக.30-ம் தேதி உறுதி அளித்தனர்.

இந்நிலையில், வீட்டுக் கடன் அடமானப் பத்திரம், கடன் தள்ளுபடி சான்றிதழ், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.5 லட்சத்துக்கான பத்திரம் ஆகியவற்றை தஞ்சாவூர் கோட்டாட்சியர் வேலுமணி, வட்டாட்சியர் வெங்கடேசன் ஆகியோர் ஆனந்த்தின் மனைவி ஹேமாவிடம் நேற்று வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in