காளையார்கோவில் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கண்மாய் மீட்பு

காளையார்கோவில் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த பணையரேந்தல் கணமாய் மீட்கப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது.
காளையார்கோவில் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த பணையரேந்தல் கணமாய் மீட்கப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கண்மாய் மீட்கப்பட்டது.

காளையார்கோவில் அருகே பணையரேந்தல் கண்மாய் மூலம் 50 ஏக்கர் நிலங்களுக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய்க்கு செங்குளம் பகுதியில் இருந்து ஒன்றரை கி.மீ.,-க்கு வரத்துக்கால்வாய் உள்ளது.

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாயை 8 ஏக்கர் அளவிற்கு தனியார் ஒருவர் ஆக்கிரமித்து இருந்தார்.

இதையடுத்து பணையரேந்தல் கிராமமக்கள் சிவகங்கை ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் புகார் கொடுத்தனர். ஆட்சியர் உத்தரவில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பில் இருந்த கண்மாயை மீட்டனர்.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் ஜேசிபி இயந்திரங்கள் உதவியோடு கிராமமக்கள் கண்மாயை சீரமைத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in