Published : 29 Mar 2014 10:43 AM
Last Updated : 29 Mar 2014 10:43 AM

வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி முகாம்

சென்னை மாவட்டத்தில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்த மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் 3,254 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும், 1500-க்கும் மேற்பட்ட வாக்காளர் கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து, 84 துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளை நிர்வகிக்க ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் நான்கு வாக்குச் சாவடி அதிகாரிகள் என, 13,352 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்காலிக அதிகாரிகளாக ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோரும் நியமிக்கப்பட் டுள்ளனர். இந்த வாக்குச் சாவடி அதிகாரிகளுக்கு 30-ம் தேதி பயிற்சி முகாம்கள் நடக்க உள்ளன.

இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சட்டமன்ற தொகுதிகள் வாரியாக நடைபெற உள்ள இந்த பயிற்சி முகாம்கள், சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடக்க உள்ளது. இதில், உயர் அதிகாரிகள் பங்கேற்று, வாக்குச் சாவடி அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்க உள்ளனர்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x