Published : 18 Sep 2015 08:14 AM
Last Updated : 18 Sep 2015 08:14 AM
தமிழகத்தில் அதிகரித்து வரும் வெயிலால் பொது மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவ மழை காலத்தில் வெயில் குறையும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது.
இந்த மாதம் தொடக்கத்தில் தமிழகத்தில் சராசரி யாக 33 டிகிரி என்றிருந்த வெயில் படிப்படியாக உயர்ந்து சுமார் 37 டிகிரிவரை எட்டியுள்ளது. சென்னை யில் கடந்த 12-ம் தேதி 34.6 டிகிரி, 13-ம் தேதி 35.1 டிகிரி, 14-ம் தேதி 34.7 டிகிரி, 15-ம் தேதி 36.2 டிகிரி, 16-ம் தேதி 36.9 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.
ஆனால் கடந்த ஆண்டுகளில் செப்டம்பர் மாதங் களில் 37 டிகிரியைவிட குறைவாகவே வெயில் பதிவாகி யுள்ளது. 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிக பட்சமாக 36.7 டிகிரி பதிவாகியது. 2013-ம் ஆண்டில் 35.7 டிகிரி, 2012-ல் 36.8 டிகிரி, 2011-ல் 36.4 டிகிரி, 2010-ல் 35.1 டிகிரி அதிகபட்சமாக பதிவாகியது.
சென்னையில் மட்டுமல்லாமல் மதுரையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் அதிகபட்ச வெயில் 39 டிகிரியாகும். ஆனால் இந்த ஆண்டு 40 டிகிரி வரை வெயில் சுட்டெரித்துள்ளது. அதே போன்று கடலூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியிலும் வெயில் அதிகரித்துள்ளது.
எனினும் அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் மழை வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமி ழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யக் கூடும். அடுத்த 2 நாட்களில் பரவலாக பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT