Last Updated : 05 Sep, 2020 05:23 PM

 

Published : 05 Sep 2020 05:23 PM
Last Updated : 05 Sep 2020 05:23 PM

விருதுநகரில் மணல் கடத்தலில் ஈடுபட்டவரை 5 கி.மீட்டர் துரத்திச்சென்று பிடித்த வருவாய்த்துறையினர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக கண்மாயில் மணல் அள்ளியவரை 5 கி.மீட்டர் தூரம் வருவாய்த்துறையினர் துரத்திச்சென்றுப் பிடித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சன்குளம் கிராமத்தில் உள்ள கடம்பன்குளம் கண்மாய் உள்ளது.

அங்கு ஜேசிபி இயந்திரம் மூலம் சட்டவிரோதமாக சிலர் மணல் அள்ளுவதவாக சிவகாசி சார்-ஆட்சியருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து சார்-ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவுப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் வருவாய்த்துறையினர் கடம்மன் குளம் கண்மாயில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அதிகாரிகள் வருவதைக் கண்டு அங்கு ஜேசிபி இந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மணல் அள்ளிக்கொண்டிருந்த மர்ம நபர்கள் தப்பியோடினர். மேலும், மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை அதன் ஓட்டுநர் வேகமாக ஓட்டிச்சென்றார்.

அச்சன்குளத்திலிருந்து சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை வழியாக சுமார் 5 கி.மீட்டர் தூரம் அவரை வருவாய்த்துறை அதிகாரிகள் துரத்திச்சென்று மடக்கிப் பிடித்து ஓட்டுநர் லட்சுமணபிரபுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிந்து லட்சுமணபிரபுவைக் கைதுசெய்தனர். மேலும், தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x