Published : 02 Sep 2015 04:11 PM
Last Updated : 02 Sep 2015 04:11 PM
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமீன் நிபந்னையை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வளர்மதி என்பவர் தொடர்ந்த வழக்கில், இளங்கோவன் நிபந்தனையுடனான முன் ஜாமீன் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், நிபந்தனையை தளர்த்தக் கோரி இளங்கோவன் தொடர்ந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தில் இளங்கோவன் தினமும் கையெழுத்திட தேவையில்லை என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT