Published : 18 Sep 2015 08:36 AM
Last Updated : 18 Sep 2015 08:36 AM
மூத்த தமிழறிஞர் அ.அ.மண வாளன், கு.வெ.பாலசுப்பிரமணி யன் உள்ளிட்ட 10 பேருக்கு எஸ்ஆர்எம் தமிழ்ப் பேராய விருது கள் வரும் 19-ம் தேதி வழங்கப்பட உள்ளன.
தமிழ் அறிஞர்கள், படைப்பாளி களை கவுரவித்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கிவருகிறது.
இந்த ஆண்டுக்கான தமிழ்ப் பேராய விருதுக்கு தமிழ் அறிஞர் கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுமைப்பித்தன் படைப்பிலக் கிய விருது வண்ணதாசன், பாரதியார் கவிதை விருது - இன் குலாப், ஜி.யு.போப் மொழி பெயர்ப்பு விருது - ஆர்.சிவகுமார், பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது - மு.சிவலிங்கம், ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது - ஓவியர் புகழேந்தி, முத்து தாண்டவர் தமிழிசை விருது - சகோ.மார்கரெட் பாஸ்டின், வளர் தமிழ் விருது - அ.மோகனா, விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது தரன். விருது பெறு வோருக்கு தலா ரூ.1.50 லட்சம் பரிசு வழங்கப்படும்.
பரிதிமாற்கலைஞர் விருது (பரிசு ரூ.2 லட்சம்) தமிழ் அறிஞர் கு.வெ.பாலசுப்பிரமணியனுக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருதான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது (ரூ.5 லட்சம்) மூத்த தமிழ் அறிஞர் அ.அ.மணவாளனுக்கும் வழங்கப் படுகிறது.
விருது வழங்கும் விழா சென்னை பொத்தேரி எஸ்ஆர்எம் பல்கலைக் கழக வளாகத்தில் வரும் சனிக்கிழமை நடக்க உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT