Last Updated : 04 Sep, 2020 01:02 PM

 

Published : 04 Sep 2020 01:02 PM
Last Updated : 04 Sep 2020 01:02 PM

புதுச்சேரியில் ஒரே நாளில் 20 பேர் கரோனாவுக்கு உயிரிழப்பு;  புதிதாக 591 பேருக்குத் தொற்று உறுதி; 16 ஆயிரத்தைத் தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை  

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் கரோனா தொற்றுக்கு 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். புதிதாக 591 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 172 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 280 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 4) கூறும்போது, "புதுச்சேரியில் 1,846 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 525, காரைக்காலில் 18, ஏனாமில் 44, மாஹேவில் 4 என மொத்தம் 591 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்

மேலும், புதுச்சேரியில் 17 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் 2 பேர் என ஒரே நாளில் அதிகபட்சமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். உருளையன்பேட்டை கோவிந்தசாலை குபேர் நகரை சேர்ந்த 50 ஆண், முத்திரையர்பாளையம் சேரன் நகர் அகத்தியர் வீதியை சேர்ந்த 81 வயது முதியவர், ரெட்டியார்பாளையம் மரியாள் நகரை சேர்ந்த 50 வயது ஆண், வம்பாகீரப்பாளையம் முத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 50 வயது ஆண், திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த 79 வயது மூதாட்டி, வைத்திக்குப்பம் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்த 46 வயது ஆண், மூலக்குளம் பசும்பொன் நகரை சேர்ந்த 62 வயது முதியவர் ஆகியோர் ஜிப்மரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பழைய பேருந்து நிலையம் அருகே வசிக்கும் 70 வயது முதியவர், வில்லியனூர் வசந்தம் நகரை சேர்ந்த 55 வயது ஆண், மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த 62 வயது மூதாட்டி, பாரதி வீதி முத்துமாரிம்மன் கோயில் வீதியை சேர்ந்த 52 வயது பெண், உருளையன்பேட்டை அன்னை இந்திரா நினைவு நகரை சேர்ந்த 52 வயது ஆண், தட்டாஞ்சாவடி நவசக்தி நகரை சேர்ந்த 80 வயது முதியவர் ஆகியோர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கோர்க்காடு புது நகரை சேர்ந்த 55 வயது பெண், அரியாங்குப்பம் காக்காயந்தோப்பு ராதா கனபதி நகரை சேர்ந்த 54 வயது பெண் இருவரும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், தொண்மாநத்தம் சுப்ரமணியபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த 60 வயது முதியவர் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியிலும், லாஸ்பேட்டை வாசன் நகரை சேர்ந்த 75 வயது முதியவர் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியிலும், காரைக்கால் பெரியார் நகரை சேர்ந்த 69 வயது மூதாட்டி காரைக்காலிலும், ஏனாம் யுகேவி நகரை சேர்ந்த 36 வயது பெண், ஏனாம் மேட்டகுரு பகுதியை சேர்ந்த 53 வயது பெண் ஆகிய இருவரும் ஏனாம் அரசு பொது மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.73 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 16 ஆயிரத்து 172 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 3,145 பேர், காரைக்காலில் 141 பேர், ஏனாமில் 131 பேர் என 3,417 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,528 பேர், காரைக்காலில் 89 பேர், ஏனாமில் 159 பேர், மாஹேவில் 25 பேர் என மொத்தம் 1,801 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 5,218 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 348 பேர், காரைக்காலில் 13 பேர், ஏனாமில் 34 பேர் என மொத்தம் 395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 674 (66 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 80 ஆயிரத்து 201 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 62 ஆயிரத்து 654 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x