Published : 03 Sep 2020 07:50 AM
Last Updated : 03 Sep 2020 07:50 AM

கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை

தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணிக்குசெப்.30-க்குள் விண்ணப்பிக் கலாம்.

தமிழ்நாடு அஞ்சல் துறையில் 3,162 கிராம அஞ்சல் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி யோடு கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 18-ல் இருந்து 40-க்குள் இருக்க வேண்டும். ஊதியம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14,500 வரை வழங்கப்படும்.

இப்பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி கடைசி நாளா கும். கூடுதல் விவரங்களுக்கு https://appost.in/gdsonline/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x