Published : 14 Sep 2015 10:47 AM
Last Updated : 14 Sep 2015 10:47 AM

திமுகவில் இணைந்தார் மதிமுக மாவட்ட செயலாளர்: அதிமுகவுக்கு வைகோ உதவுவதாக குற்றச்சாட்டு

மதிமுகவிலிருந்து விலகிய அக் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு, அதிமுகவுக்கு மதிமுக மறைமுக மாக உதவுவதாக குற்றம்சாட்டினார்.

திமுகவிலிருந்து விலகி வைகோ மதிமுகவை தொடங்கிய போது, பாலவாக்கம் சோமுவும் மதிமுகவில் இணைந்தார். மதிமுக வில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் சோமு, காஞ்சிபுரம் மாவட் டச் செயலாளராகவும், பின்னர் மதிமுக உயர்நிலைக்குழு உறுப் பினராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை சந்தித்த அவர், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திமுகவில் இணைந்தது தொடர் பாக பாலவாக்கம் சோமு கூறிய தாவது: மதிமுகவிலிருந்து வைகோ விலகிய போது அவருடன் நானும் விலகியதை தவறாக நினைக்கி றேன். மதிமுக மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் உருவாக்கியதில் எனக்கு விருப்பமில்லை. சமீபத்தில் நடந்த மதிமுக மாவட்டச் செயலா ளர்கள் கூட்டத்தில் அதிமுக வென்றாலும் சரி, திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று வைகோ கூறினார். இது எனக்கு வேதனையை அளித்தது. மதிமுக மறைமுகமாக அதிமுகவுக்கு உதவு கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x