Published : 23 Sep 2015 07:59 AM
Last Updated : 23 Sep 2015 07:59 AM

ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர்: நெல்லையில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

“தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர். இங்கு ஆட்சி நடக்கவில்லை காமெடி காட்சிதான் நடக்கிறது” என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் தெரிவித்தார்.

நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை தொடங்கியுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நேற்று 2-வது நாளாக தனது பயணத்தை திருநெல்வேலி மாவட் டம், பணகுடியில் தொடங்கி னார். அங்குள்ள ஓடு தயாரிப்பு தொழிற்சாலையில் தொழி லாளர்களிடம் குறைகளைக் கேட் டறிந்தார். தேவையான களிமண் கிடைக்காததால் 100-க்கும் மேற் பட்ட செங்கல் சூளைகள் மூடப் பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது:

முந்தைய திமுக ஆட்சியில் எப்படிப்பட்ட நிலை இருந்தது, தற் போது எப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதெல்லாம் உங்களுக்கு நன்கு தெரியும். உங்களுக்கு உரிய அடிப்படை தேவையை பூர்த்திசெய்யவில்லை. காப்பீடு செய்யப்படவில்லை. அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு பிரச்சி னைகளில் தற்போது சிக்கித் தவிக்கிறார்கள்.

உங்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் உங்களை தேடி வருவதும் இல்லை. உங் கள் குறைகளைக் கேட்பதும் இல்லை. நாங்கள் ஆட்சியி்ல் இல்லை. எதிர்கட்சியாகவும் இல்லை. ஆனால் உங்கள் குறை களைக் கேட்டறிய நேரில் வந்திருக்கிறோம். திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டன? என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதை எண்ணிப் பாருங்கள்.

இன்றைக்கு நடப்பது ஆட்சி யல்ல; கருணாநிதி சொல்வது போல் காட்சிதான் நடக்கிறது. அதுவும் காமெடி காட்சிதான் நடக் கிறது. அமைச்சர்கள்கூட முதல்வ ரைப் பார்க்க முடிவதில்லை.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. வரும்காலத்தில் திமுக ஆட்சி மூலம் உங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x