Published : 01 Sep 2020 07:30 AM
Last Updated : 01 Sep 2020 07:30 AM

169 நாட்களுக்கு பிறகு இன்று வணிக வளாகங்கள் திறப்பு

தமிழகத்தில் கரோனா தொற்றுபரவியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் வணிக வளாகங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுகளை ஏற்று செப்டம்பர் 1-ம் தேதி முதல் வணிக வளாகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

169 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்படும் நிலையில்,வளாக நிர்வாகத்தினர் நேற்றே முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். வளாகங்கள் முழுவதும் கிருமிநாசினிதெளிக்கும் பணிகள், குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள், அடிக்கடி தொடும் இடங்களை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள், கடைகளில் உள்ள பொருட்களை தயார்படுத்தும் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தேவையான தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்
களின் உடல் வெப்ப நிலைபரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தபின்னர் கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முக கவசம் அணிவதையும் நிர்வாகத்தினர் உறுதி செய்தனர்.

வணிக வளாக நுழைவு வாயிலில் கையை தூய்மைப்படுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் கருவியும் அங்கு இருக்கவேண்டும். கரோனா அறிகுறிஇல்லாத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வணிக வளாகத்துக்குள் வரும்பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், சரக்குகள் நுழையும் வழி, வெளியேறும் வழி தனித்தனியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுநெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x