Published : 31 Aug 2020 07:28 AM
Last Updated : 31 Aug 2020 07:28 AM

சாதகமான வானிலை நிலவுவதால் 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்

சாதகமான வானிலை நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘வரும் நாட்களில் தமிழகத்தில் அதிக மழை கிடைப்பதற்கான சாதகமான வானிலை நிலவுகிறது. ராஜஸ்தான், டெல்லி வழியாக வடக்கு வங்கக் கடல் வரை செல்லும் தென்மேற்கு பருவ மழைக்குகாரணமாக விளங்கும் மைய அச்சு வரும் நாட்களில் இமயமலை அடிவாரத்தை நோக்கி நகர உள்ளது.

அதன் காரணமாகவும், தென்தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை,சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x