இந்திரா, ராஜீவ் தபால் தலைகளை பயன்படுத்த பாஜக அரசு விதித்துள்ள தடையை திரும்ப பெற வேண்டும்: காங்கிரஸ் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

இந்திரா, ராஜீவ் தபால் தலைகளை பயன்படுத்த பாஜக அரசு விதித்துள்ள தடையை திரும்ப பெற வேண்டும்: காங்கிரஸ் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
Updated on
1 min read

முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி ஆகியோரின் தபால் தலைகள் பயன்படுத்த விதித்துள்ள தடையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென காங்கிரஸ் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரின் தபால் தலைகளை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் தபால் அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில், அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், சுமார் 100 பேர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அப்போது காங்கிரஸ் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கூறியதாவது:

பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. தற்போது, நாட்டின் முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜீவ் ஆகியோரின் தியாகத்தை நினைவில் கொள் ளாமல் அவர்களது தபால் தலைகளை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் ஆற்றிய பணிகளை மறக்க முடியாது.

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்..

பாஜக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் அவர்களின் புகழை அழிக்க முடியாது. மோடி அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றாமல் இது போன்ற தேவையில்லாத நடவடிக்கைகளை மேற்கொள் கின்றனர். இந்த போக்கை மாற்றிக் கொண்டு இந்திரா, ராஜீவ் தபால் தலைகளை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக திரும் பப் பெற வேண்டும். தமிழகத் தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத் தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in