Published : 26 Sep 2015 08:08 AM
Last Updated : 26 Sep 2015 08:08 AM
சென்னை சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தின் இணையதளம் மர்ம நபர்களால் திடீரென முடக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள படி, இது பாகிஸ்தான் கும்பலின் சதிச்செயலா அல்லது உள்ளூர் விஷமிகளின் கைவரிசையா என்பது தெரியவில்லை.
சென்னையில் உள்ள சுங்கத் துறை ஆணையர் அலுவலகத்தின் பிரத்யேக இணையதளம் www.chennaicustoms.gov.in. இந்த இணையதளம் மூலம், தினமும் நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் ஏற்றுமதி, இறக்குமதி தொடர் பான தகவல்களை அறிந்துகொள் கின்றனர்.
இந்நிலையில், இந்த இணைய தளம் கடந்த 22-ம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. ‘‘பைஸல் 1337’ என்பவரால் சென்னை கஸ்டம்ஸ் ஹவுஸ் ‘ஹேக்’ (முடக்கம்) செய்யப்பட்டுள்ளது! பாகிஸ்தான் ஜிந்தாபாத்! நாங்கள் பாக். சைபர் அட்டாக்கர் டீமை சேர்ந்தவர்கள். பாதுகாப்பு என்பது வெறும் மாயை’’ என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இது, இந்த இணையதளத் தைப் பயன்படுத்தும் வர்த்தகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இணையதளத்தை முடக்கியது உண்மையிலேயே பாகிஸ்தான் கும்பல்தானா, அல்லது உள்நாட்டு விஷமிகள் கைவரிசையா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக டெல்லி தலைமை அலுவலகத்துக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாக சுங்கத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT