கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த கொளத்தூர் தொகுதி மக்களுக்கு உணவளிக்க ரூ.10 லட்சம் நிதி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த கொளத்தூர் தொகுதி மக்களுக்கு உணவளிக்க ரூ.10 லட்சம் நிதி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Updated on
1 min read

கரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்த கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதி மக்களுக்கு உணவளிக்க 3-வது கட்டமாக ரூ. 10 லட்சத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவ `ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தை திமுக செயல்படுத்தியது. அதன் ஒருபகுதியாக கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தனது தொகுதி மக்களுக்கு உணவு வழங்க ‘ஒரு மாதத்தில் ஒரு லட்சம் பேருக்கு உணவு’ என்ற திட்டத்தை கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கினார்.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள ஏழை மக்களின் பசியை போக்கும் இத்திட்டத்துக்கான முழு செலவுகளையும் மு.க. ஸ்டாலின் ஏற்றுக் கொண்டுள்ளார். இதற்காக ஏற்கெனவே இருகட்டங்களாக ரூ. 20 லட்சத்தை சமையல் கலைஞர் துர்கா பிரசாத்திடம் ஸ்டாலின் வழங்கிஇருந்தார். தற்போது மூன்றாவது கட்டமாக ரூ.10 லட்சத்தை சமையல் கலைஞர் துர்கா பிரசாத்திடம் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்
டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in