Published : 26 Aug 2020 07:19 AM
Last Updated : 26 Aug 2020 07:19 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தே.லட்சுமணன் மறைவுக்கு பாலகிருஷ்ணன் இரங்கல்

சென்னை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரான தே.லட்சுமணன் (84) மறைவுக்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தே.லட்சுமணன் கரோனாபாதிப்பால் நேற்று முன்தினம் காலமானார். கால்நடைத் துறையில் பணியாற்றிய அவர் அரசு ஊழியர் உரிமைகளுக்காகப் போராடியவர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உருவாக்கத்தில் பங்காற்றியவர். `மார்க்சிஸ்ட்’ மாத இதழ்ஆசிரியராகவும் இருந்தார். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உ.வாசுகியின் கணவர் மறைவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியின் கணவர் ஏ.பி.விஸ்வநாதன் நேற்று காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும்ஜி.ராமகிருஷ்ணன், அ.சவுந்தரராசன், பெ. சண்முகம், க.கனகராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x