எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
Updated on
1 min read

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 துணைத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வெழுத தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் செப்டம்பர் 10, 11-ம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதேபோல் பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு 9, 10-ம் தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் தேர்வுத் துறையால் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்களை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in