Last Updated : 20 Aug, 2020 08:08 PM

 

Published : 20 Aug 2020 08:08 PM
Last Updated : 20 Aug 2020 08:08 PM

திருப்புவனத்தில் விநாயகர் சிலைகளை விடுவிக்காததைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம்

திருப்புவனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விடுவிக்காததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விநாயகர் சிலைகளை விடுவிக்காததைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரையில் இருந்து பரமக்குடிக்கு 2 மினிவேன்களில் நேற்று 12 விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. அவற்றைத் திருப்புவனம் அருகே மணலூரில் போலீஸார் பறிமுதல் செய்தனர். சிலைகளை விடுவிக்க வலியுறுத்தி பாஜகவினர் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

ஆனால் விடுவிக்க மறுத்த போலீஸார், விநாயகர் சிலைகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டனர். இந்நிலையில் இன்று சிலைகளை விடுவிக்காததைக் கண்டித்து திருப்புவனத்தில் சந்தைக் கடையில் இருந்து நரிக்குடி முக்குரோடு மணிமந்திர விநாயகர் கோயில் வரை பாஜகவினர் கோஷமிட்டுச் சென்றனர்.

பிறகு ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x