Published : 30 Sep 2015 08:40 AM
Last Updated : 30 Sep 2015 08:40 AM
தமிழக சட்டப்பேரவை கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் 10-வது கூட்டத்தொடரின் முதல் கூட்டம் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, மார்ச் 25-ம் தேதி நிதிநிலை அறிக்கைக்காக 2-வது முறை கூடியது. 3-வது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி மானிய கோரிக்கை விவாதங்களுக்காக கூடியது. 3-வது கூட்டத்தின் இறுதி நாளான நேற்று நிதி, பொதுத்துறை உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டுவந்த தீர்மானத்தின் மூலம் சட்டப்பேரவை கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் பி.தனபால் வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT