Published : 17 Aug 2020 07:36 AM
Last Updated : 17 Aug 2020 07:36 AM

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் ஜோதி யாத்திரை- ஊரடங்கை மீறி கூடிய 15 பேர் மீது வழக்குப்பதிவு

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சி சார்பில், ராஜீவ் ஜோதி யாத்திரை நேற்று புறப்பட்டது. இதில், ஊரடங்கை மீறியதாக 15 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆக.20-ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, கர்நாடகா மாநில காங்கிரஸ் நிர்வாகி பிரகாஷம் தலைமையில், ச்ரொபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் இருந்து ராஜீவ் ஜோதி யாத்திரை நேற்று டெல்லிக்கு புறப்பட்டது.

இதில் ராஜீவ் காந்தி நினைவகப் பொறுப்பாளர் முருகானந்தம், குரோம்பேட்டை செந்தில்குமார், பல்லாவரம் தீனதயாளன், பெரும்புதூர் அருள்ராஜ், தாம்பரம் விஜய் ஆனந்த், ஹரிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழுஊரடங்கு தடையை மீறி ராஜீவ் நினைவிடத்தில் கூடியது குறித்து, ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் விசாரிக்கும்போதே ஜோதியை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் புறப்பட்டது. அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்த போலீஸாரின் சோதனையில் இ-பாஸ் அனுமதி இருந்ததால் அந்த வாகனத்தை விடுவித்தனர்.

இந்நிலையில், ராஜீவ் நினைவகத்தில், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் தடையை மீறி கூட்டம் கூடியதாகக் கூறி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 15 பேர் மீது ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x