Published : 17 Aug 2020 07:15 AM
Last Updated : 17 Aug 2020 07:15 AM

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரூ.300 கோடியில் 4-வது புதிய ரயில் பாதை: தெற்கு ரயில்வே பரிந்துரை

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது புதிய ரயில்பாதையை ரூ.300 கோடியில் அமைக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே தற்போது 2 தண்டவாளப் பாதைகளில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது புதிய பாதை அமைக்க வேண்டுமென தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் கரோனா பாதிப்பால் நிதி நெருக்கடி காரணமாக புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்துவதில் ரயில்வே வாரியம் தயக்கம் காட்டி வருகிறது. இதற்கிடையே, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது புதிய பாதைக்கு மண் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு சுமார் ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இதர மாநிலங்களின் ரயில்கள் சென்னை கடற்கரைமற்றும் எழும்பூர் வழியாக செல்ல போதிய ரயில் பாதை இல்லாததால், கூடுதல் ரயில்களை இயக்குவதில் சிக்கல்ஏற்படுகிறது. எனவே, இந்ததடத்தில் புதியபாதை மிகவும்அவசியமானதாக இருக்கிறது.

எனவே, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.3கிலோ மீட்டர் புதிய ரயில்பாதை திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து, போதிய நிதிஒதுக்கீடு செய்ய வேண்டுமென ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x