Published : 15 Aug 2020 07:56 AM
Last Updated : 15 Aug 2020 07:56 AM

கடலூரில் தடை செய்யப்பட்ட ரூ.1.5 கோடி குட்கா பறிமுதல்

கடலூரில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 கோடி மதிப்பிலான குட்கா, பான்பராக் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடலூர் கே.என்.பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு, மொத்த விற்பானை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.எஸ்.பி ஸ்ரீஅபிநவ், கடலூர் துணை கண்காணிப்பாளர் க.சாந்தி மற்றும் போலீஸார் நேற்று அந்த வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர்.

அந்த வீட்டில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட 7 வகையான போதைப் பொருட்கள் மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1.5 கோடி இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கடலூர் திருப்பாதிரிபுலியூரில் மளிகைக்கடை நடத்தி வரும், பண்ருட்டி கணிசப்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பாரதி என்பவர், இந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இவர் மீது ஏற்கெனவே புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தலைமறைவாகியுள்ள அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. திருப்பாதிரிபுலியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதே பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x