Published : 15 Aug 2020 06:43 AM
Last Updated : 15 Aug 2020 06:43 AM
தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மருத்துவ இயக்குநராக டாக்டர் எம்.ரவிக்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏற்கெனவே, இந்த பதவியில் இருந்த டாக்டர் பிஷ்னு பிரசாத் நந்தா பதவி உயர்வுபெற்று, ரயில்வே வாரியத்தின் சுகாதாரத் துறையின் இயக்குநர் ஜெனரலாக பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 1984-ம் ஆண்டு ரயில்வே மருத்துவத் தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.ரவிக்குமார், பல ஆண்டுகளாக பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். கிழக்கு மத்திய ரயில்வேயில் தலைமை மருத்துவ இயக்குநராகவும், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT