Published : 14 Aug 2020 08:25 AM
Last Updated : 14 Aug 2020 08:25 AM

பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை

பிளஸ் 1 மாணவர் சேர்க்கையின்போது பள்ளிகள் இடஒதுக்கீடு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்துவித மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் நீங்கலாக மற்ற அனைத்துவித பள்ளிகளிலும் இடஒதுக்கீடு விதிகளின்படி பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அந்தவகையில் பொதுப்பிரிவுக்கு 31 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 26.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 சதவீதம், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் 3.5 சதவீதம், ஆதிதிராவிடர் 18 சதவீதம், பழங்குடியினர் 1 சதவீதம் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அதேபோல, சேர்க்கை பட்டியல் தயாரிக்கும்போது 10-ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முன்னுரிமை தரவேண்டும். மேலும், இதுதொடர்பான உரிய அறிவுறுத்தல்களை பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x