Published : 14 Aug 2020 07:58 AM
Last Updated : 14 Aug 2020 07:58 AM
கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக விமான நிலைய பார்சல்சர்வீஸ் ஊழியர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்கள் வழியாக நடந்த சுமார் 400 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள என்ஐஏ குழுவினர், இந்த தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருகின்றனர். இதில், கடத்தல்காரர்களுக்கு உதவிய சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறித்துவிசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், பார்சல் சர்வீஸ் ஊழியர்களுக்கும் தங்கக் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலைய பார்சல் சர்வீஸ் ஊழியர்களிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT