Published : 13 Aug 2020 07:54 AM
Last Updated : 13 Aug 2020 07:54 AM

பெரியாரின் உறவினர் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பச்சையப்பா தெருவில் வசிப்பவர் முத்துகிருஷ்ணன் மகன் சதீஷ்கிருஷ்ணா(34). தனியார் நிறுவனத்தில் விற்பனை மேற்பார்வையாளராக வேலைசெய்துவரும் இவர், கும்பகோணம் பாஜக நகர தலைவர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

இதுகுறித்து சதீஷ்கிருஷ்ணா கூறியது: பெரியாரின் அம்மாவும், என் கொள்ளுப்பாட்டியும் சகோதரிகள். என் அம்மா வனிதா ஈரோட்டில் பிறந்தவர். என் தந்தை முத்துகிருஷ்ணன் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியைச் சேர்ந்தவர். என் தந்தை கொரடாச்சேரியில் ரைஸ் மில் நடத்தி வந்தார். அப்போது பெரியார் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் நாங்கள் கும்பகோணத்துக்கு வந்துவிட்டோம். நான் 2008-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தேன். பெரியாரின் உறவினராக இருந்தாலும், பாஜகவின் கொள்கைகள் எனக்கு பிடித்துள்ளதால் அதிமுகவில் இருந்து விலகி தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x