Published : 13 Aug 2020 07:32 AM
Last Updated : 13 Aug 2020 07:32 AM

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பசு மாட்டுடன் விவசாயிகள் போராட்டம்

உத்திரமேரூர் அருகே 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நேற்று கருப்புக் கொடி ஏந்தி, பசு மாட்டுடன் வந்து போராட்டம் நடத்தினர்.

சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதைக் கண்டித்து 8 வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சாலவாக்கம் அருகே உள்ள சீத்தனஞ்சேரி பகுதியில் விவசாயிகள் பசு மாடு மற்றும் கருப்புக் கொடியுடன் வந்து தங்களுடைய விவசாய நிலங் களில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x