Published : 12 Aug 2020 07:44 AM
Last Updated : 12 Aug 2020 07:44 AM

சென்னை புறநகரில் 2 ரவுடிகள் கொலை

சென்னை புறநகரான ஆலந்தூர்மற்றும் முடிச்சூர் பகுதிகளில் 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த நங்கநல்லூர், பி.வி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர்(27). நேற்றுமுன்தினம் இரவு வெளியே சென்றவர், நேற்று காலை பழவந்தாங்கல் நேரு நெடுஞ்சாலையில் உள்ள கன்டோன்மென்ட் போர்டுமைதானத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

பழவந்தாங்கல் போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரபாகர் மீது கொலை, வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளதால், இதுகுறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முடிச்சூரில்...

தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர், நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பெயின்டர் ரவி(35). கஞ்சா பழக்கம் உள்ள இவர் மீது, பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது நண்பரான பதுவஞ்சேரி ராஜேஷிடம் நேற்று முன்தினம் இரவு ரவி கஞ்சா கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். ராஜேஷ் கஞ்சா தராததால் அவரைரவி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ‌ஆத்திரமடைந்த ராஜேஷ், ரவியை கத்தியால் குத்தியுள்ளார். சம்பவ இடத்திலேயே ரவி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பீர்க்கன்காரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x