Published : 12 Aug 2020 07:34 AM
Last Updated : 12 Aug 2020 07:34 AM
பழவேற்காடு அரசு பள்ளியில் காவலாளியை கட்டிப் போட்டு தொலைக்காட்சி பெட்டி, 14 மடிக்கணினிகளை கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடில் உள்ளது ஜெகதாம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி. நேற்று முன்தினம் நள்ளிரவு பள்ளிக்கூடத்துக்குள் புகுந்த மர்ம கும்பல், காவலாளி முகுந்தையனை சரமாரியாக தாக்கி, கட்டிப்போட்டுவிட்டு, வகுப்பறை ஒன்றில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, 14 மடிக்கணினிகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
அக்கம்பக்கத்தினர் காவலாளியை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்துள்ள திருப்பாலைவனம் போலீஸார், மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT