Published : 12 Aug 2020 07:28 AM
Last Updated : 12 Aug 2020 07:28 AM

ஊரடங்கு தளர்வால் வழக்குப் பதிவு, வாகன பறிமுதல் குறைந்தது

ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்வதையும், வாகனங்களை பறிமுதல் செய்வதையும் போலீஸார் குறைத்துள்ளனர்.

கடந்த 139 நாட்களில் ஊர டங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது 8 லட்சத்து 67 ஆயிரத்து 158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 9 லட்சத்து 57 ஆயிரத்து 743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 6 லட்சத்து 77 ஆயிரத்து 629 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 20 கோடியே 15 லட்சத்து 79 ஆயிரத்து 543 ரூபாய் அபராத மாக வசூலிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x