Published : 12 Aug 2020 07:26 AM
Last Updated : 12 Aug 2020 07:26 AM

முழு ஊரடங்கு தினத்தில் மின் நுகர்வு 6 கோடி யூனிட்கள் குறைந்தன

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த ஞாயிறன்று மின் நுகர்வு 6 கோடி யூனிட்கள் குறைந்தன.

தமிழகத்தில் தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்கள் என்ற அளவில் மின்நுகர்வு உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி தினசரி மின்நுகர்வு 36.99 கோடியாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது.

தற்போது ஊரடங்கில் தளர்வுஅளிக்கப்பட்டு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படத் தொடங்கிஉள்ளதால், தற்போது தினசரி மின்நுகர்வு 29 கோடி யூனிட்கள் என்ற அளவில் உள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த ஞாயிறன்று கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. இதனால், அன்றைய தினம்மின்நுகர்வு 5.97 கோடி யூனிட்கள் சரிவடைந்தன.

இதன்மூலம், அன்றைய தினம்மின்நுகர்வு 22.57 கோடி யூனிட்களாக இருந்தது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x