Published : 10 Aug 2020 07:27 AM
Last Updated : 10 Aug 2020 07:27 AM

ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: அரசு எச்சரிக்கை

ரேஷன் ஊழியர்கள் 10 அம்சகோரிக்கைகளை வலியுறுத்திஇன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ‘‘மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து, ரேஷன் கடைகள் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

வேலைநிறுத்தம் செய்வோ ருக்கு சம்பளம் பிடித்தம் செய்யநடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று அனைத்து மண்டல இணை பதிவாளர்றகளுக்கும் கூட்டுறவு சங்கப் பதிவாளர் இல.சுப்பிரமணியன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x