Published : 09 Aug 2020 07:38 AM
Last Updated : 09 Aug 2020 07:38 AM

வரி செலுத்தும் மக்கள்தான் நாட்டை கட்டமைக்க உதவுகின்றனர்: சாஸ்த்ரா பல்கலை விழாவில் நிர்மலா சீதாராமன் கருத்து

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட 16-வது நானிபல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

இணைய வழியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்கிவாலா நூற்றாண்டு விழாவையும், செயற்கை அறிவாற்றல் மற்றும் தகராறுகளுக்கான மாற்று தீர்வுக்கான டாடா பல்கிவாலா இருக்கையையும் தொடங்கி வைத்து பேசினார்.

பல்கிவாலாவின் வாழ்க்கை மற்றும் அவர் விட்டுச் சென்ற மரபுகளை நினைவுகூர்ந்த அவர் பேசும்போது, வரி செலுத்துவோரின சுமையை குறைப்பதற்கும், நாட்டின் வரி அமைப்பை மாற்றியமைப்பதற்கும் மத்திய அரசின் அர்ப்பணிப்பைப் பற்றி விளக்கினார் என்றார்.

வரி செலுத்துவோர்தான் நாட்டை கட்டமைப்பவர்கள் என்றும், வரி மதிப்பீடு டிஜிட்டல் மயமாக்கப்படுவதாகவும், வரி செலுத்துவோரின் 0.25 சதவீதம் பேரின் கணக்கு மட்டுமே ஆய்வுக்குஉட்படுத்தப்படுகிறது என்றும் கூறினார்.

டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் பேசும்போது, டாடா குழுமத்துக்கும் நானி பல்கிவாலாவுக்கும் இருந்த தொடர்பை விளக்கினார். நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் வழக்குகள் குறித்து கூறும்போது, நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும்என்றார்.

சட்டத் துறைக்கு பெரிதும் பங்காற்றிய நானி பல்கிவாலாவின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலை. துணைவேந்தர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம் கூறினார். மாதிரி நீதிமன்ற போட்டிகள், வரிவிதிப்பு பற்றிய இருக்கை அமைப்பது, பொது சட்டம் குறித்த ஆராய்ச்சி, சட்ட உதவி முகாம்கள் ஆகியவை நடத்தப்பட உள்ளதாக கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x