Published : 08 Aug 2020 06:07 PM
Last Updated : 08 Aug 2020 06:07 PM

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மிக கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதிக கனமழையும் கோவை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யும்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்டு 9 (நாளை ) முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக மிக கனமழையும், தேனி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழையும் உள் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த மாவட்டங்களில் மழை அளவு (செ.மீ.):

நீலகிரி மாவட்டம் தேவாலா 34, பந்தலூர் 19, ஹாரிசன் 18, அவலாஞ்சி 11, கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லாறு 13, சோலையாறு 11 மற்றும் சின்கோனாவில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு அரபிக்கடல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மகாராஷ்டிரா, குஜராத், கடலோரப் பகுதியை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கேரளா, கர்நாடகா, கடலோரப் பகுதிகள், லட்சத்தீவுகள் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 9

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மகாராஷ்டிரா, குஜராத் கடலோரப் பகுதியை ஒட்டிய கிழக்கு மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகளில் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 10

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மகாராஷ்டிரா, குஜராத் கடலோரப் பகுதியை ஒட்டிய கிழக்கு மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 11

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 12

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்குப் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

ஆகஸ்ட் 8 கடல் அலை முன் அறிவிப்பு:

தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்ட் 9 இரவு 11-30 மணி வரை உயர் கடலலைகள் 3.5 முதல் 4 14 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x