Last Updated : 07 Aug, 2020 05:43 PM

 

Published : 07 Aug 2020 05:43 PM
Last Updated : 07 Aug 2020 05:43 PM

ஆரம்ப நிலையில் கரோனா இருந்ததால் ஜிப்மரிலிருந்து 'டிஸ்சார்ஜ்'; வீட்டில் மகனுடன் தனிமைப்படுத்திக்கொண்ட புதுச்சேரி அமைச்சர்

அமைச்சர் கந்தசாமி, அவரது மகன் விக்னேஷ்.

புதுச்சேரி

ஆரம்ப நிலையில் கரோனா தொற்று இருந்ததால் அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் ஜிப்மரிலிருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கும், அவரது மகனும் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான விக்னேஷுக்கும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும், சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று (ஆக.6) இரவு அமைச்சரும், அவரது மகனும் ஜிப்மரில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

அமைச்சர், அவரது மகன் தனிமைப்படுத்திக் கொண்ட வீடு.

இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, "அமைச்சர் கந்தசாமி, அவரது மகன் விக்னேஷ் ஆகிய இருவருக்கும் ஆரம்ப நிலை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குக் காய்ச்சல் உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள இவர்களுக்கு வசதி உள்ளது. அவ்வழிகாட்டு நெறிமுறைப்படி, மருந்துகள் வழங்கப்பட்டு, வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள அவரது வீட்டில் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x