Last Updated : 07 Aug, 2020 11:21 AM

 

Published : 07 Aug 2020 11:21 AM
Last Updated : 07 Aug 2020 11:21 AM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ.208.30 கோடி மதிப்பீட்டில் 8 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்

நெல்லை

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில், 208.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 31.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து முடிந்த 19 திட்டபணிகளை தொடங்கியும் வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தொடர்ந்து 5982 பயனாளிகளுக்கு 36.17 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

முன்னதாக வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவும் , கரோனா நோய்த்தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் நெல்லை வந்த முதல்வருக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் மாவட்ட நிர்வாகம் , காவல்துறையினர் மற்றும் கட்சி பிரமுகர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதல்வர் முதல் தளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் .

பின்னர் நடந்த நிகழ்ச்சியில், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய திட்டமான தாமிரபரணி , நம்பியாறு கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்டத்தின் 4-ம் நிலைப்பணிகள் , கடனாநதியின் காங்கேயன் அணைக்கட்டுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மாறன்குளத்தில் இருந்து கல்லூர் குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் திட்டம் , 6 பணிகளுக்கும், தென்காசி மாவட்டத்தில் ஊர்மேல் அழகியான் குளத்தில் இருந்து தண்ணீரு் கொண்டு செல்லும் கால்வாய் திட்டம் ராமநதியில் இருந்து ஆலங்குளம் பகுதிக்கு தண்ணீர் கொண்டுவரும் கால்வாய் திட்டம் என மொத்தம் இரண்டு மாவட்டங்களிலும் 208.30 கோடி ரூபாய் மதிப்பில் 8 புதிய பணிகளுக்கு அடிக்கல்நாட்டினார்.

இதனைத் தொடர்ந்த நெல்லை மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகம் , புதிய வகுப்பறைக்கட்டிடங்கள் அங்கன்வாடி கட்டிடங்கள் என 11 நடந்து முடிந்த திட்டப்பணிகளையும் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் வட்டத்தில் படுகை அணை திறப்பு , பள்ளிக் கட்டிடங்கள் என நடந்து முடிந்த 8 பணிகள் என மொத்தம் 31.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 19 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் வீட்டுமனைப்பட்டா, அம்மா இருசக்கர வாகனம் , வேளாண்மை எந்திரங்கள் என அனைத்து துறைகளின் சார்பில் 5982 பயனாளிகளுக்கு 36.17 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர் .

தொடர்ந்து வளர்ச்சித்திட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x