Published : 06 Aug 2020 07:49 AM
Last Updated : 06 Aug 2020 07:49 AM
இ-பாஸ் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நியாயமான காரணங்களுக்காக வெளியூர் செல்ல இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் 90 சதவீதம் பேருக்கு நிராகரிக்கப்படுகிறது. ஆனால் பணம் பெற்றுக் கொண்டு சிலர் மிக எளிதாக இ-பாஸ் வாங்கி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
விமான நிலையத்தில் இருந்துவெளியே வரும் பயணிகளிடம் தமிழகத்துக்குள் செல்ல ரூ.8,500கொடுத்தால் 15 நிமிடத்தில் இ-பாஸ் பெற்றுத் தருவதாக டாக்ஸி ஓட்டுநர்கள் கூறுகின்றனர். கர்நாடகா, ஆந்திரா போன்றபக்கத்து மாநிலங்களுக்குச் செல்ல ரூ.20 ஆயிரம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரூ.3 ஆயிரத்துக்கு இ-பாஸ் வாங்கித் தருவதாக டிராவல்ஸ் ஏஜென்ட் ஒருவர்தொலைபேசியில் பேசுவதும், ரூ.500 இ-பாஸ் வாங்கித் தருவதாக மற்றொரு ஏஜென்ட் வாட்ஸ்அப்பில் பேசிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் இ-பாஸ் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன. அதைத் தொடர்ந்து மாவட்டஎல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT